Site icon Tamil News

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சோகம்!

நிகரகுவாவில் இன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டில், 70 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து அங்குள்ள ரன்கோ கிரண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அங்குள்ள மான்செரா ஆற்றுப்பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர். அவற்றில் 10 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version