Site icon Tamil News

மியன்மாரில் மோச்சா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதை கடந்தது!

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மோச்சா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

மோச்சா சூறாவளி நேற்றுமுன்தினம் மணித்தியாலத்துக்கு சுமார் 195 கிலோமீற்றர் வேகத்தில் ராக்கைன் கரையைக் கடந்தது.

இதனால்இ ‘பு மா’ எனும் கிராமத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரியான கார்லோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்இ நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

காவுங் தோக் கார் கிராமத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என அக்கிராமத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version