Site icon Tamil News

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 48 பெண்கள்

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 48 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது தோ பாயோ, புக்கிட் திமா, ரிவர் வேலி மற்றும் சின் மிங் ஆகிய இடங்களில் உள்ள மசாஜ் செய்யும் இடங்களில் இந்த சோதனை நடந்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டு அமலாக்க சோதனை நடவடிக்கை கடந்த மாதம் ஏப்ரல் 26 முதல் 28 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது.

அதில் சிக்கிய 20 முதல் 70 வயதுக்குட்பட்ட மொத்தம் 110 பேர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அதில் பிடிபட்ட 48 பெண்கள், 20-47 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் Women’s Charter 1961 சட்டத்தின்கீழ் விசாரணையில் உள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் 1990 இன் கீழ் work permit அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்டவர்களிடன் இருந்து ரொக்க பணம், கையடக்க தொலைபேசி மற்றும் சூதாட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version