Site icon Tamil News

பிரித்தானியாவில் குழந்தைகள் எதிர்நோக்கும் ஆபத்து : டோரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு!

உயிருக்கு ஆபத்தான நோய்கள், உடல் பருமன், உணவுக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்களால் குழந்தைகளின் ஆரோக்கியம் ஒரு கொடிய நெருக்கடியை எதிர்கொள்வதாக பிரித்தானிய அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டோரிகளின் NHS சீர்திருத்தங்கள் “மன்னிக்க முடியாதவை மற்றும் தவறாக கருதப்பட்டவை என பிரதமர் கெய்ர் ஸ்டாமர் விமர்சித்துள்ளார்.

நாட்டின் குழந்தைகளின் ஆரோக்கியம் மோசமடைந்து வருவது குறித்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்புகள் முன்னணி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான லார்ட் டார்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி குறித்த அறிக்கையில் சில முக்கியமான விடயங்கள் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக குழந்தை பருவ தடுப்பூசிகளுக்கான தடுப்பூசி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ADHD மருந்துகளுக்கான பரிந்துரைகள் கடந்த ஆண்டில் 10% அதிகரித்துள்ளது.

2019-20ல் இருந்து 82% உணவுக் கோளாறு உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெருமளவானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version