Site icon Tamil News

ஸ்ரீ ரங்காவிற்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கடந்த வருடம் ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதியின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்

சட்டவிரோதமாக ஒன்று கூடியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதற்கு ரங்கா உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

ஸ்ரீரங்கா சொத்திற்கு சேதம் ஏற்படுத்தும் தீயநோக்கத்துடன் அத்துமீறி உள்ளே நுழைந்தார் என குற்றம்சாட்டப்படலாம் எனவும் சிஐடியினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் ஸ்ரீரங்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவர் ஒரு ஊடகவியலாளராகவே அந்த இடத்தில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு பிணைவழங்கி கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Exit mobile version