இஸ்ரேல்-ஹமாஸ் போரின் காரணமாக பெத்லகேமில் கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமான விவிலிய நகரம், பேய் நகரத்தை ஒத்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுவாக மேங்கர் சதுக்கத்தை அலங்கரிக்கும் பண்டிகை விளக்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் காணவில்லை என்றும் காலியான சதுக்கத்தில் டஜன் கணக்கான பாலஸ்தீனிய பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் மரம் இல்லாமல் மற்றும் விளக்குகள் இல்லாமல், இருள் மட்டுமே உள்ளது” என நகரவாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.