Site icon Tamil News

பிரான்ஸில் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பெண் ஒருவர் மீது கத்தி மூலம் தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவரை பயணிகள் சிலர் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒன்று பிரான்சின் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. Toulouse (Haute-Garonne) நகரில்வெள்ளிக்கிழமை இரவு குறித்த சம்பவ்ழ்ம் இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் அங்குள்ள Balma-Gramont மற்றும் Mirail-Université மெற்றோ நிலையங்களிடையே உள்ள சுரங்கப்பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவரை ஆயுததாரி ஒருவர் பின் தொடர்ந்துள்ளார்.

கத்தி ஒன்றில்மூலம் அப்பெண்ணை தாக்க முற்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த பயணிகள் சில ஆயுததாரி மீது பாய்ந்து அவரை கீழே தள்ளி விழுத்தினர்.

ஆயுததாரியை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறித்து எடுத்ததுடன், பொலிஸார் அழைத்துள்ளனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், 37 வயதுடைய குறித்த ஆயுததாரியை கைது செய்தனர்.

Exit mobile version