Site icon Tamil News

பாட்நெட்டின் மூளையாக செயற்பட்ட சீன பிரஜை கைது!

பில்லியன் கணக்கான டொலர்களை திருடுவதற்கு பயன்படுத்தப்படும் பாட்நெட்டின் மூளையாக செயல்பட்ட சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

911 S5″ போட்நெட் உலகின் மிகப் பெரியது. கிட்டத்தட்ட 200 நாடுகளில் உள்ள கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தளம் நிதி மோசடிகள், அடையாள திருட்டு மற்றும் குழந்தை சுரண்டல் உள்ளிட்ட குற்றங்கள் முழுவதையும் எளிதாக்கியது, FBI இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறினார்.

இதனை பயன்படுத்தியே குறித்த சீன இளைஞர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் அவர் யுன்ஹே வாங் குறைந்த பட்சம் $99m (£78m) சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

பாட்நெட் என்பது பாதிக்கப்பட்ட கணினிகளின் வலையமைப்பாகும், இது ஹேக்கர்கள் வெகுஜன சைபர் தாக்குதல்கள் மற்றும் மோசடிகளை நடத்த தொலைதூரத்தில் இயங்குகிறது.

35 வயதான வாங், கடந்த வாரம் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார், மேலும் 29 மில்லியன் டாலர் (£22.8 மில்லியன்) கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டதாக FBI இன் இணைய நடவடிக்கைகளுக்கான துணை உதவி இயக்குநர் பிரட் லெதர்மேன் கூறினார்.

 

Exit mobile version