Site icon Tamil News

“மொய்தீன் பாய்” கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது இல்லையா? தட்டிப்பறித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்

இரு தினங்களுக்கு முன்பு ரஜினியின் லால் சலாம் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் இவர் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இவரு 34 வருடங்களுக்கு முன்பு நடித்த அலாவுதீன் அற்புத விளக்கு படத்திற்கு பின் இஸ்லாமியராய் இந்த படத்தில் தான் ரஜினி நடித்துள்ளார்.

ஆனால் இந்த படத்திற்கு முதலில் இவரை வைத்து இந்த கதையே அவருடைய பொண்ணு ஆரம்பிக்கவில்லை.

இந்தப் படத்திற்கு முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மொய்தின் பாய் கதாபாத்திரத்துக்கு யோசித்து கதை எழுதினது வேறு ஒருவரை. அதாவது இந்த கேரக்டர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவரை நினைத்து தான் மொய்தீன் பாய் கதையை ரெடி பண்ணி இருக்கிறார்.

அத்துடன் அவரிடம் கதையை சொல்லி இவரும் எனக்கு கதை பிடித்திருக்கிறது நடிக்கிறேன் என்று சம்மதமும் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு ஐஸ்வர்யா இதைப் பற்றி அவருடைய அப்பா ரஜினிகாந்த் இடம் கூறியிருக்கிறார். அவர் அப்படி என்ன கதை எனக்கு கொஞ்சம் சொல்லு என்று கேட்டிருக்கிறார்.

இவரும் லால் சலாம் படத்தின் மொத்த கதையையும் கூறி அதில் மொய்தின் பாய் கேரக்டரையும் கூறி இருக்கிறார்.

இதை கேட்டு ரஜினி மிகவும் அசந்து போய் இந்த படத்தில் மொய்தின் பாய் கேரக்டராக நான் நடிக்கிறேன் என்று இவரே கேட்டு வாங்கி இருக்கிறார்.

Exit mobile version