Tamil News

பிரித்தானிய கடவுச்சீட்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து பிரித்தானியா கடவுச்சீட்டுகளிலும் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.

அதாவது இந்த வாரத்திலிருந்து மன்னர் பெயரால் இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெரிய மாற்றம் செய்யப்படுவதால், இந்த வாரத்திலிருந்து புதிய கடவுச்சீட்டுகளைப் பெறும் பிரித்தானியர்கள் இதனை கவனிக்கலாம்.

கடைசி ஆண் மன்னரான சார்லஸின் தாத்தா கிங் ஜார்ஜ் VI இன் ஆட்சியின் முடிவில் 1952 க்குப் பிறகு முதல் முறையாக “His Majesty” என்ற தலைப்பில் .மூன்றாம் சார்லஸ் மன்னரின் பெயரில் கடவுச்சீட்டுகளில் ” “His Majesty” ” என்ற பட்டத்தை இந்த வாரம் வெளியிட உள்ளது

பல தசாப்தங்களாக, ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சியின் போது ”Her Majesty” என்ற பெயரில் அதிகாரப்பூர்வ பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இது “வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்” என்று உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேனால் விவரிக்கப்பட்டது.
.

Exit mobile version