Tamil News

இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணை இன்று!

இலங்கை தமிழரசு கட்சியின் வழக்கு இன்றைய தினம் (05.01) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எம் ஏ சுமந்திரன் திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் ஈடுபட்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெருவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றதுடன் குறித்த வழக்கு முடிவடைந்ததையடுத்து எம் ஏ சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக விரைந்து சென்று பூசை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதே நேரம் குறித்த ஆலயத்தில் கனடா நலன்புரிச் சங்கத்தின் ஊடாக அன்னதானம் வழங்கப்பட்டதுடன் அன்னதான நிகழ்வினை இலங்கை தமிழரசி கட்சியின் மாவட்ட கிளைத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நலன்புறு சங்கத்தின் தலைவருமான எஸ் குகதாசன் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version