கனடாவில், பொதுமக்களை கடித்து தாக்கிய நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஹால்டன் பிராந்தியத்தின் புர்லிங்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று பேரை கடித்த நாய் ஒன்றை சுட்டுக் கொன்றதாக ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நாய் கடிக்கு இலக்கான இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர் ஆபத்து இன்றி நாயை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடையவும், துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நாய் என்ன வகையைச் சேர்ந்தது என்பது பற்றியோ உரிமையாளர்கள் பற்றியோ பொலிஸார் தகவல்களை வெளியிடவில்லை.