Site icon Tamil News

வயிற்று வலியால் உயிரிழந்த சிறுவன்

வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தர்கா நகரின் பப்புகொட, இலக்கம் 129 B இல் வசித்து வந்த பி.கே.டி. ஆதிஷா ஹன்சனா (10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த இக்குழந்தை, தர்கா நகரிலுள்ள ஸ்ரீ ஞானசார கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் ஐந்து வருடங்களாகப் பயின்று வந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர் வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்ததாக அவரது தாயார் கூறுகிறார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தர்கா நகர வைத்தியசாலைக்கும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

பின்னர் பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தையின் நோய் கண்டறியப்படவில்லை எனவும் சிகிச்சை பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

Exit mobile version