தனது பதினொரு வயது மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்கவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உரகஸ்மன்ஹந்திய, கோரக்கீன பிரதேசத்தில் வசிக்கும் பிரதிவாதி, 2008 ஆம் ஆண்டு முதல் தனது சொந்த மகளை பல தடவைகள் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.