Site icon Tamil News

ஈரான் மீதான தடை தொடரும் : ஐரோப்பிய நாடுகள் திட்டவட்டம்!

ஈரான் மீதான தடைகளை தொடர்ந்து நீட்டிக்கபோவதாக பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இது குறித்து மூன்று நாடுகளும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

இதன்படி  மத்திய கிழக்கு நாட்டின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மேம்பாடு தொடர்பாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளன.

தெஹ்ரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையே இப்போது செயலிழந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின் கீழ் இந்த நடவடிக்கைகள் அக்டோபரில் காலாவதியாகவிருந்தது.

இந்நிலையில் 03 ஐரோப்பிய நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,  அணுசக்தி ஒப்பந்த  பேச்சுவார்த்தைக்கு உதவிய E3 என அழைக்கப்படும் மூன்று ஐரோப்பிய கூட்டாளிகள், “ஈரானின் நிலையான மற்றும் கடுமையான இணக்கமின்மைக்கு நேரடியான பதிலில்” தங்கள் பொருளாதாரத் தடைகளைத் தக்கவைத்துக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் இருந்து தடை மற்றும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் அல்லது ஈரானுக்கு அனுப்புவதற்கும் தடை விதிக்கிறது.

அதேபோல் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தில் ஈடுபட்டுள்ள பல ஈரானிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான சொத்து முடக்கமும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version