Site icon Tamil News

அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் குறித்து அரபுலீக் மாநாட்டில் வலியுறுத்தல்!

பிராந்­தியப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பத்தில் அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் என அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் வெளி­யி­டப்­பட்ட ‘ஜெத்தா பிர­க­ட­னத்தில்’ கோரப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அரபு லீக்கில் சிரி­யாவை மீண்டும் இணைத்­த­மைக்கும் இப்­பி­ர­க­டனம் வர­வேற்பு தெரிவித்­துள்­ளது.

அரபு லீக்கின் 32ஆவது உச்­சி­மா­நாடு சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் நடைபெற்ற நிலையில்,  ஜெத்தா பிர­க­டனம்’ வெளி­யி­டப்­பட்­டது.

குறித்த பிரகடனத்தில்,  பலஸ்­தீனப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான அரபு சமா­தான முன்­மு­யற்­சி­களை இப்­பி­ர­க­டனம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சூடானில் பதற்­றத்தை தணிக்கவும், லெபனான் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும்  அவ­சி­ய­மான சீர்தி­ருத்­தங்­களை மேற்­கொள்ள அந்­நாட்டு ஜனா­தி­ப­தியை இப்­பி­ர­க­டனம் கோரி­யுள்­ளது.

யேமனில் பாது­காப்ப,  ஸ்திரத்­தன்­மையை ஊக்­கு­விப்­பற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ரவு தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்­கு­பற்­றிய சிரிய ஜனா­தி­பதி பஷர் அல் அஸாத்தை அரபு நாடு­களின் தலை­வர்கள் வர­வேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version