Site icon Tamil News

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அடுத்தவாரம் நிறைவேற்றப்படும் – ஷெஹான்!

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற வாரத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும், மறு ஆய்வு நிலுவையில் உள்ளதால், தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  வெளிநாட்டு கடனாளர்களுடன் ஒப்பந்தங்களை எந்த அளவிற்கு முடித்துள்ளோம் என்பது முக்கியம் எனத் தெரிவித்த அவர், முதல் ஆய்வு முடியும் வரையில்இதுவரை நடந்த எந்த சீர்திருத்தத்தையும் நம்மால் தலைகீழாக மாற்ற முடியாது எனவும் கூறினார்.

Exit mobile version