Site icon Tamil News

மருந்து கொள்வனவு மற்றும் விநியோகம் குறித்து விசாரணை!

கடந்த இரண்டு வருடங்களாக மருந்துகளை கொள்வனவு செய்தமை மற்றும் விநியோகித்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு உட்பட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக விசாரணை நடத்தப்படும் என கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

“குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மருந்துகளை கொள்முதல் செய்தல் மற்றும் விநியோகித்தல் செயல்முறைகளை முழுமையாக ஆராய்வதை விக்கிரமரத்ன நோக்கமாகக் கொண்டிருப்பதால், விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சமீபத்திய அறிக்கைகள், தரமற்ற மருந்துகளின் பயன்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம், மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட கணினி அமைப்பு தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, அறிக்கை விரைவில் பரிசீலனைக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்” என அவர் மேலும் கூறினார்.

Exit mobile version