Tamil News

விவாகரத்து ஆன குஷியில் குத்தாட்டம் போட்ட சர்ச்சை நடிகை..

ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராக்கி சாவந்த் பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருகின்றார். ராக்கி சாவந்துக்கு பெரும்பாலும் கவர்ச்சி வேடங்கள் தான் சினிமாவில் கிடைத்தன. இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கம்பீரம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். நடிகை ராக்கி சாவந்த் 2008ம் ஆண்டு தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க சுயம் வரம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பரபரப்பை கிளப்பினார். பின்னர் அந்நிகழ்ச்சியின் மூலம் வெளிநாட்டை சேர்ந்த ரித்தேஷ் என்கிற தொழிலதிபரை தேர்ந்தெடுத்து அவரை திருமணமும் செய்துகொண்டார் ராக்கி சாவந்த். சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து ஆதில் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ராக்கி சாவந்த். திருமணமானதும் அவர் தனக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக கூறிய அவர், அவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதோடு தனது பெயரையும் பாத்திமா என மாற்றிக்கொண்டார். திருமணமான ஒரே மாதத்தில் ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பை காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். ராக்கி சாவந்த் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஆதில் கானை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். ஆதிலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய ராக்கி சாவந்த், அவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். தற்போது அவருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து கிடைத்த குஷியில், நடிகை ராக்கி சாவந்த் பிரேக் அப் பார்ட்டி ஒன்றை கொண்டாடி உள்ளார். அதில் விவாரத்து கிடைத்ததால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி குத்தாட்டமும் போட்டுள்ளார். அவர் பிரேக் அப் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.    
Exit mobile version