Tamil News

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர் செய்த செயல்… உலகம் முழுவதும் வைரலான வீடியோ!

பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த ஆசிரியையின் கன்னத்தில் மாணவர் மாறி, மாறி அறையும் வீடியோ உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. வகுப்பில் நாற்காலியில் ஆசிரியை அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு மாணவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைகிறார். ஆனால், ஆசிரியை எதுவும் நடக்காதது போல், கலங்காமல் அமர்ந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் மீண்டும் ஆசிரியை கன்னத்தில் அறைகிறார்.

இதில் ஆசிரியையின் கண்ணாடி தெறித்து கீழே விழுகிறது. இதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்கிறார்கள். தாக்கிய மாணவன் அத்துடன் விடாமல் ஆசிரியையை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இந்த காட்சிகள் முழுவதும் அடங்கிய வீடியோ தான் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

ஆசிரியையை தாக்கும் மாணவன்

ஒழுக்கம் கற்றுத்தரும் கல்வி நிலையங்களில் மாணவர்களின் செயல்கள் அவர்களது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பயன்தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற காலித்தனமான மாணவனின் நடவடிக்கையால் ஒட்டு மொத்த மாணவ உலகத்திற்கும் கெட்டப்பெயரை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாணவனின் அடாவடி செயலுக்கு வடக்கு கரோலினா ஷெரிப் பாபி எஃப். கிம்ப்ரோ கிம்ப்ரோ ஜூனியர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பள்ளியின் முதல்வர் நோயல் கீனர் கூறுகையில், வைரலான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பள்ளியில் ஒழுக்கம் குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version