இலங்கைக்கு வழங்கிய மேலும் இரண்டு யானைகள் குறித்தும் தாய்லாந்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி குறித்த இரு யானைகளின் உடல்நிலைக் தொடர்பில் ஆராய்வதற்காக செப்டம்பர் மாதத்தில் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக தாய்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் முத்துராஜா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.