Site icon Tamil News

லைகா நிறுவனத்தில் சோதனை

லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version