Site icon Tamil News

பயங்கரவாத தாக்குதல் : பாரிஸ் தாக்குதல் குறித்து மக்ரோன் விமர்சனம்!

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகே நிகழ்த்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் ஜெர்மன் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தில் பொலிஸார் சரியான சமையத்தில் வரவில்லை என்றால் மேலும் பலர் உயிரிழந்திருப்பார்கள் எனக் கூறியதாகவும், பாலஸ்தீனர்களின் நிலை கண்டு தான் கவலையடைவதாக தெரிவித்தாகவும் சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதிகாரிகள் சந்தேகநபர் 2016 இல் மற்றொரு தாக்குதலைத் திட்டமிட்டதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் பிரெஞ்சு பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு பட்டியலில் இருந்தார், மேலும் அவர் மனநல கோளாறுகள் உள்ளவராக அறியப்பட்டவர் என்றும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version