Site icon Tamil News

பொரளை பல்பொருள் அங்காடித் தாக்குதல் சம்பவம்!! பொலிசார் நீதிமன்றில் வெளிப்படுத்திய தகவல்

பொரளை பல்பொருள் அங்காடியில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் தலா 5,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் சஜிந்திர வீரசூரியவினால் இன்று (25) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய பிணை வழங்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஏழு பேரில் ஐந்து பேர் முறைப்பாட்டாளரால் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முறைப்பாட்டாளர் மீது முன்னைய குற்றங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை.

தாக்குதலுக்கு உள்ளான பெண் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் பல்பொருள் அங்காடிக்கு வந்த பின்னர் பால் பொதியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அவர் குழந்தை பால் பாக்கெட் வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் விலை 1080 ரூபாய் என்றும், அப்படி பணம் இல்லாததால் 60 ரூபாய்க்கு சாக்லேட் பாக்கெட் ஒன்றை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

குறித்த பெண்ணை ஊழியர்கள் கண்காணித்து வந்ததாகவும், அவர் வெளியே வர முற்பட்ட போது, ​​முகாமையாளரால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு நவம்பர் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Exit mobile version