Site icon Tamil News

உக்ரைன் கொடியை பிடிங்கிய ரஷ்ய பிரதிநிதியால் உச்சிமாநாட்டில் பதற்றம்!

துருக்கியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ரஷ்ய பிரதிநிதி ஒருவர் உக்ரைன் கொடியை இழுத்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளது.

உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி தனது தேசியக் கொடியை ரஷ்ய தூதுக்குழு உறுப்பினர் ஓல்கா டிமோஃபீவாவிற்கு பின்னால் ஏற்றினார்.

ரஷ்ய அணியின் மற்றொரு உறுப்பினரான, வலேரி ஸ்டாவிட்ஸ்கி,  மரிகோவ்ஸ்கியின் கைகளில் இருந்து கொடியை இழுத்தார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version