Site icon Tamil News

சிட்னி ரயிலில் இளைஞனின் விபரீத செயல் – தீவிரமாக தேடும் அதிகாரிகள்

சிட்னி ரயிலின் முன்பக்கத்தில் தொங்கிய வாலிபர் குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் செயின்ட் லியோனார்ட்ஸ் ரயில் நிலையம் அருகே அவர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாரதி உடனடியாக ரயிலை நிறுத்தினார். ஏறக்குறைய 400 டன் எடை கொண்ட இந்த ரயில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிட்னியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாதுகாப்பற்ற முறையில் ரயிலில் பயணம் செய்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

இந்த குற்றத்திற்கு 5,500 டொலர் அபராதம் விதிக்கப்படும்.

Exit mobile version