Site icon Tamil News

மாணவனின் கொடூர தாக்குதலில் ஆசிரியர் பலி: பிரான்ஸ் ஜனாதிபதி நேரில் செல்ல உள்ளதாக தகவல்

பா து கலே (Pas-de-Calais) மாவட்டத்தில் உள்ள Arras நகரில் உள்ள பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

SAINT THOMAS D’AQUIN எனும் உயர்கல்வி பாடசாலையில் கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர் ஒருவர் அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியுள்ளது 15 வயதுடைய அதே வகுப்பில் பயிலும் மாணவ எனவும், வகுப்பறை நேரத்தில் திடீரென எழுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும் அறிய முடிகிறது. கத்தி ஒன்றின் மூலம் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தும் போது மாணவன் அல்லா அக்பர் என கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளி உடனடியாக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சம்பவ இடத்துக்கு நேரில் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version