Site icon Tamil News

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை!

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டு வாய்ப்புகளை சீரமைக்கும் நோக்கில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி  முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.

ஒரு விண்ணப்பதாரர் நாட்டிற்குள் பெட்ரோலியத்தை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அல்லது விற்பனை செய்ய முன்வந்தால், அவர் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version