Site icon Tamil News

தைவானின் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த வேண்டும் : ஹு யு-இஹ் வலியுறுத்தல்!

சீனாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள தைவானின் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த விரும்புவதாக எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஹு யு-இஹ் தெரிவித்துள்ளார்.

நியூ தைபே நகரில் நடந்த செய்தி மாநாட்டின் போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போரின் செலவை அவர்கள் ஏற்க வேண்டும் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பை வலுப்படுத்துவதைத் தவிர, பெய்ஜிங்குடன் உரையாடலை மறுதொடக்கம் செய்வதாகவும்  ஹூ உறுதியளித்தார்.

பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளரான வில்லியம் லாய்க்கு அடுத்தபடியாக Hou இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version