Tamil News

திருமணத்திற்கு தயாரான டாப்ஸி… மாப்பிள்ளை யார் தெரியுமா?

சமீபத்தில் தன்னுடைய காதலர் பற்றி மனம் திறந்த டாப்ஸி, தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் விரைவில், இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் தான் நடிகை டாப்ஸி பண்ணு, தனது நீண்ட நாள் காதலரும் பேட்மிண்டன் வீரருமான, மத்தியாஸ் போவை காதலித்து வருவதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, இவர்களின் திருமண செய்தி தற்போது தென்னிந்திய திரையுலகம் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. மேலும் டாப்ஸியின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெறவுள்ளதாக உள்ளதாகவும், இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் என யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

டாப்சியும் மத்யாஸும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும் பல வருடமாக தங்களின் உறவை ரகசியமாக வைத்திருந்த டாப்ஸி, கடந்த வருடம் தான் முதல் முறையாக காதல் குறித்து மனம் திறந்தார்.

தன்னுடைய காதலரை பற்றி டாப்ஸி கூறும் போது… ” என்னுடைய காதலருடனான உறவில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் அவரை விட்டு விலகுவது அல்லது வேறு யாருடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் டாப்ஸி மற்றும் மத்தியாஸ் திருமணம், மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் டாப்ஸி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சமீபத்தில் தான், நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்நானி திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவரை தொடர்ந்து… டாப்ஸியும் தன்னுடைய திருமணத்திற்கு தயாராகியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களுக்கு தங்களின் அட்வான்ஸ் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

 

Exit mobile version