Site icon Tamil News

இந்தியாவுக்கு எதிரான T20 கிரிக்கெட்… ஆஸ்திரேலிய வீரர்கள் 6 பேர் திடீர் விலகல்!

இந்தியாவிற்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகி தாயகம் திரும்புகின்றனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை ஆஸ்திரேலியா ரிலீஸ் செய்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட், ஆகியோர் நாடு திரும்புகிறார்கள்.

இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் நாடு திரும்புவார்கள். ஏற்கெனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றனர். கடந்த 45 நாட்களுக்கும் மேலாக இந்த வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில், அவர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, உலகக் கோப்பையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே T20 அணியில் நீடிக்கிறார். பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் புதிதாக இணைகின்றனர். இன்றைய போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

Exit mobile version