Site icon Tamil News

இலங்கை பொலிஸ் காவலில் இருந்த தமிழ் இளைஞர் உயிரிழப்பு!!! சுவிஸ் கடும் கண்டனம்

இலங்கை பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக தூதர் சிரி வால்ட் X இல் ஒரு செய்தியை வெளியிட்டார்.

காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் இறந்தது குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் உள்ளது.

காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமற்ற முறையில் விசாரிக்கப்பட வேண்டும்” என்று தூதுவர் சிறி வால்ட் கூறினார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவராக சிறி வால்ட் அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Exit mobile version