Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து விமாத்தில் ஏறிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பான் செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்த போது கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வத்தளை ஹந்தலையைச் சேர்ந்த ஏ.பி.சுதாகர் இந்திரஜித் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் செல்வதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

சந்தேகநபர் ஜப்பானில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு இலங்கைக்கு வந்து திருமணம் செய்துகொண்டவர் எனவும், பின்னர் அவர் ஜப்பான் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து.

அவரை வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Exit mobile version