Site icon Tamil News

அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம் – புல்லில் சிக்கிய சக்கரம்

டோக்கியோவிலிருந்து ஸூரிக் சென்றுகொண்டிருந்த சுவிஸ் ஏர்லைன்ஸின் Boeing 777 விமானம் கஸக்ஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது.

சனிக்கிழமை விமானத்தில் மருத்துவ ஆலோசனை தேவைப்படும் சம்பவம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியபோது அதன் மூக்குப்பகுதியில் இருக்கும் சக்கரம் புல்லில் சிக்கிக் கொண்டுள்ளது.

அதனால் அதை ஓடுபாதையில் இழுத்துச் செல்ல நேரிட்டது. விமானம் சேதத்துக்காகச் சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் சென்றுகொண்டிருந்த 319 பயணிகளுக்குக் காயம் ஏற்படவில்லை.

Exit mobile version