Site icon Tamil News

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு குருந்துவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு இலக்கம் 7 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருந்துவத்தை இலவச சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு தற்போது பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version