Site icon Tamil News

கனடாவின் 6 இலங்கையர்களை கொலை சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை!

கனடாவின் ஒட்டாவா நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நீதிமன்றில் அவர் சுமார் 4 நிமிடங்கள் மாத்திரமே முன்னிலைப்படுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது சந்தேகநபரிடம் அவரது பெயர் மற்றும் பிறந்த திகதி என்பன தொடர்பில் வினவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி முன்னெடுப்பதற்கான கோரிக்கை அவரது சட்டத்தரணியூடாக முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த குறித்த சந்தேகநபருக்கு ஆதரவாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி சந்தேகநபரின் குடும்பத்தினர் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version