Tamil News

ஜெயம் ரவியின் அந்த தோழி பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்

ஜெயம் ரவியின் விவாகரத்து பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த கதையில் உள்ளே வந்தவர் தான் கெனிஷா பிரான்சிஸ்.

தற்போது ஜெயம் ரவி முழுக்க முழுக்க கெனிஷா பிரான்சிஸ் கட்டுக்குள் இருப்பதாகத்தான் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பாடகி சுசித்ரா தற்போது கெனிஷா பிரான்சிஸ் பற்றி திடுக்கிடும் தகவலை சொல்லி இருக்கிறார்.

ஜெனிஷா பிரான்சிஸ் தன்னை ஒரு பாடகியாக அடையாளப்படுத்துகிறார். ஆனால் இசைத்துறைக்கு சம்பந்தமான எதிலும் அவர் இல்லை, மும்பையிலும் அவர் இல்லை. கோவாவில் பப்பில் பாடுவது என்றால் எந்த ஒரு மாதிரியான ஆட்களுக்கு அவர் பாடியிருப்பார் என தெரிகிறது.

அது மட்டும் இல்லாமல் தன்னை ஒரு சைக்காலஜிஸ்ட் போல் காட்டிக் கொள்கிறார். அவர் செய்வது நேச்சுரோபதி மருத்துவம். இந்த மாதிரியான மனநிலை சிகிச்சை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை தென்னாப்பிரிக்கா நாட்டில் தான் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த முறையை தான் கெனிஷா பிரான்சிஸ் இங்கு செய்கிறார். இதற்கு தற்போது ஜெயம் ரவி விக்டம் ஆகிவிட்டார். ஆர்த்தி ரவி ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு அமைதியாக இருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது.

தைரியமாக எதிர்த்து சண்டையிட்டால் மட்டுமே ஜெயம் ரவியை காப்பாற்ற முடியும் என பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் சுசித்ரா. ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து பற்றி முற்றுப்புள்ளி வைக்க பேசியதெல்லாம் சரிதான்.

ஆனால் எதிர்காலத்தில் கெனிஷா உடன் இணைந்து ஹீலிங் சென்டர் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னது தான் பிரச்சனையின் புள்ளியாக இருக்கிறது. தடை செய்யப்பட்ட ஒரு மனநல மருத்துவ சிகிச்சையை செய்யும் பெண்ணுடன் இணைந்து ஜெயம் ரவி அதில் நாட்டம் இருப்பதாக தெரிவித்திருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Exit mobile version