Site icon Tamil News

கொழும்பு பிரபல மருத்துவமனையின் கூரையில் மீட்கப்பட்ட சத்திரசிகிச்சை கருவிகள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் சத்திரசிகிச்சை கருவிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூட்டத்தின் போது கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன இது குறித்து தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனவே சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version