பிரான்சும், இத்தாலியும் உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை தொடர வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை இன்று (21.06) எலிசே மாளிகையில் சந்தித்தார்.
இதன்போது உக்ரைனில் நடைபெறும் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் பிரான்சும் இத்தாலியும் ஒன்றுபட்டுள்ளதாக இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட எதிர்த்தாக்குதல் முடிந்தவரை பயனுள்ளதாக இருக்க வேண்டும், எனவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.