Site icon Tamil News

பிரான்ஸ் தலைநகரை அச்சுறுத்திய பெண் – சுற்றிவளைத்த பொலிஸார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழு கொள்ளைச் சம்பவங்களில் குறித்த பெண்ணுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பெண் Blanc-Mesnil நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிகளில் பரிசில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள பல பெறுமதியான நகைகள், பணம் போன்றவற்றைத் கொள்ளையிட்டுள்ளார்.

மொத்தமாக 7 மில்லியன் யூரோக்கள் வரை அவர் கொள்ளையிட்டுள்ளதாக முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் 19 வயதுடையவர் எனவும், அவருடன் சேர்த்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பதினொரு பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Exit mobile version