Site icon Tamil News

சினிமாவில் கொலை மிரட்டல்களை எதிர்கொண்ட சன்னிலியோன்!

பொலிவுட் நடிகை சன்னிலியோன் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர். இன்று வெற்றிகரமான நடிகையாக இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு நிகழ்சியில் இருந்து பொலிவுட் சினிமா துறைக்கு அறிமுகமான சந்தர்ப்பங்களில் அவர் கொலை மிரட்டல்களைக் கூட எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

நேர்காணலில் பேசிய அவர்,  பிக்பாஸ் தயாரிப்பாளர்களால் தன்னை அணுகியதாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அந்த யோசனை இல்லை. இருப்பினும், பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் தன்னை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகவும் தீவிரமாக இருந்தனர். இதனால் நான்  அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டேன்.

ஒவ்வொரு வாரமும் கடந்து செல்லும் போது, ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்”  இருப்பினும், நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, நிறைய தடைகள் இருந்தன.  ‘கொலை மிரட்டல்கள் மற்றும் வெடிகுண்டு மிரட்டல்கள்’ இருந்தன எனத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸில் சுமார் 7 வாரங்கள் இருந்ததாகவும், அந்த நிகழ்ச்சி மூலம் தனக்கு ஒரு படம் வாய்ப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.

Exit mobile version