Tamil News

TRP-யில் டல்லடிக்க துவங்கிய சீரியல்களை முடித்து ஓரம் கட்ட சன் டிவி அதிரடி திட்டம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும்பாலும் 1000 எபிசோடை எட்டாமல் முடிக்கப்படுவது இல்லை. காரணம் ரசிகர்கள் சன் டிவி சீரியல்களுக்கு கொடுத்து வரும் ஆதரவு தான் காரணம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பல சீரியல்கள் 500 எபிசோடை எட்டியதுமே முடிவுக்கு வரும் நிலை உள்ளது. அதே போல் சன் TRP-யில் டாப் 10 லிஸ்டில், சன் டிவி சீரியல்கள் 7 இடங்களையாவது கைப்பற்றும் நிலையில், சமீப காலமாக விஜய் டிவியில் ஆதிக்கமும் அதிகரித்துள்ளதால், TRP-யில் டல்லடிக்க துவங்கிய சீரியல்களை சட்டுபுட்டுனு முடித்து ஓரம் கட்டிவிட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்ப சன் டிவி திட்டம் போட்டுள்ளதாம்.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகை அல்யா மானசா மற்றும் ரிஷி நடித்து வரும் ‘இனியா’ சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்ட போது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இப்போது அப்படியே டல் ஆகி விட்டது. எனவே, இன்னும் சில வாரங்களில் இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட சன் டிவி முடிவு செய்துவிட்டது.

இதை தொடர்ந்து ‘மிஸ்டர் மனைவி’ சீரியல் டாப் 10 லிஸ்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதையும் முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாகவும், கிளைமேக்ஸ் சீன் கூடி வராததால், ‘மிஸ்டர் மனைவி’ சீரியலை முடிவுக்கு கொண்டு வருவதில் சிறு தாமதம் நீடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த சீரியலுக்கு அடுத்த படியாக, சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘மலர்’ சீரியலுக்கான வரவேற்பும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் குறைந்து விட்டதால் விரைவில் இன்னும் ஒரே மாதத்தில் கூட இந்த சீரியலும் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

சுந்தரி 2 சீரியலுக்கு முதல் சீசனுக்கு கிடைத்தது போல் வரவேற்பு கிடைக்காததால், இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதாம். அதற்க்கு ஏற்றாப்போல் கதைக்களமும் தற்போது நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத ஒரு சீரியலும் கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளது உங்களுக்கு தெரியுமா? அது தான் ஆனந்த ராகம் சீரியல். காமெடி, செண்டிமெண்ட், காதல், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த, ஜனரஞ்சகமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டதில் இருந்தே இந்த சீரியலின் நேரமும் சரியாக ஒர்க் அவுட் ஆகாமல் போனது.

முடிந்த வரை இந்த சீரியலில் இருந்த அணைத்து சஸ்பென்ஸ் ஃபேக்டரும் வெளிக்கொண்டு வர பட்டுவிட்ட நிலையில், சீரியல் கொஞ்சம் சுவாரஸ்யப்பற்று போனதால் இந்த சீரியலையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்ப சன் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

இதற்க்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மருமகள், மூன்று முடிச்சு, மற்றும் மல்லி போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெறுவது என்றே கூறப்படுகிறது.

Exit mobile version