Tamil News

சூடானில் விமான விபத்து! 9 பேர் பலி

சூடானில் ஏப்ரல் 15 முதல் சூடானின் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதனிடையே, போர்ட் சூடான் விமான நிலையத்தில் இருந்து சிவிலியன் விமானம் புறப்பட்டு விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த சிறுமி உட்பட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அன்டோனோவ் விமானம் நகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அன்டோனோவ் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று விபத்துக்குள்ளானதாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version