Site icon Tamil News

சூடான் உள்நாட்டு போர்; சிறையிலிருந்து தப்பித்த போர் குற்றவாளிகள்!

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது.இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற போர் குற்றவாளிகளான சூடானைச் சேர்ந்த அஹமத் ஹருனும், முன்னாள் ஜனாதிபதியான ஓமர் அல் பஷிரும் சூடான் சிறையிலிருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவரும் கோபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறை உடைக்கப்பட்டு இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ராணுவத்தினரே இருவருக்கும் உதவியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போர் குற்றவாளியான அஹமத் வெளியிட்டுள்ள காணொளியில், நாங்கள் சிறையிலிருந்து வெளியேறிவிட்டோம். நாட்டில் மீண்டும் நீதித்துறை செயல்படும்போது நாங்கள் நேரில் ஆஜராக தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.சிறையில் இருந்து வெளியேறிய இருவர் மீதும் ஏராளமான கொலை குற்றச்சாட்டுகளும், மனித உரிமை மீறல் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version