Site icon Tamil News

குஞ்சிப் பொரிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

குஞ்சிப் பொரிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதிய செய்ய  விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் (NLDB) மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கோழிகளுக்கு பதிலாக  176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர்  ஒரு மாத காலத்திற்குள் வாரத்திற்கு 44,000 முட்டைகளை இலங்கை எதிர்பார்ப்பதாக  குறிப்பிட்டார்.

Exit mobile version