Site icon Tamil News

யாழில் தொடர்ச்சியாக 4 கோவில்களில் ஊண்டியல் திருட்டு…

யாழ்பாணத்தில் தொடர்ச்சியாக மாணிப்பாய் பொலிஸ் பிரிவில் நான்கு நாட்களுக்குமுன் சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளது.

மணிப்பாய் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர் இதனை யாழ்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அதன் CCTV உதவியுடன் இன்று குறித்த சந்தேக நபரை வண்ணார் பண்னை சிவன் கோவிலடி முன்னால் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்து விசாரித்தனர் அவரிடம் இருந்து ஒரு தொகை உண்டியல் பணங்களும் மீட்கபட்டது.

கொழும்புத்துறை துண்டியை சேர்ந்த 35வயதுடையநபர் ஏற்கனவே யாழ் நகரபகுதியில் ஐந்து கோயில்களில் உண்டியல் உடைக்ப்பட்டு யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யபட்டு 3மாதம் வரை சிறையில் இருந்து அன்மையில்தான் வெளிவந்ததாக குறிப்பிட தக்கது.

Exit mobile version