Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கவிருந்த விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (04) இரவு 10.25 மணியளவில் மெல்பேர்னிலிருந்து கொழும்பு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 605 மோசமான காலநிலை காரணமாக மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை, தமாமிலிருந்து அதிகாலை 5.55 மணிக்கு கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகி வருவதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது

Exit mobile version