Site icon Tamil News

நாமலின் திருமணத்திற்கான மின்சாரக் கட்டண நிலுவையை செலுத்திய இராஜாங்க அமைச்சர்

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விருந்துக்காக 2.6 மில்லியன் ரூபாவை செலுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய கட்டண நிலுவையை தாம் இன்று(02.10.2023) செலுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த திருமண நிகழ்வில் பாதுகாப்பு நோக்கில் கூடுதலான மின் குமிழ்கள் ஒளிர விடப்பட்டதாகவும் இந்த செலவினை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்து அதன் வளர்ச்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கட்டணத்தை செலுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செலவை ஈடுகட்ட தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Exit mobile version