Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம் – விருப்பு வாக்கின் மூலம் இறுதி முடிவு

ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக தெளிவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள போதும் எவரும் 50 % வாக்குகள பெறாத காரணத்தினால் இரண்டம் மூன்றாம் வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் உள்ளதால் அக்கட்சி முகவர்களை வாக்கு என்னும் பணி கண்காணிப்பு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் 50 சதவீதம் உத்தியோகபூர்வ முடிவுகளை எந்தவொரு வேட்பாளரும் பெற முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளின் இரண்டாவது விருப்பத்தேர்வைக் கணக்கிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கூடிய விரைவில் முடிவுகளை உங்களுக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version