Site icon Tamil News

இலங்கையில் கடவுச்சீட்டுகள் வழங்க முடியாத நிலை – காகிதம் இல்லாததால் நெருக்கடி

இலங்கையில் தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 50 உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில், ஊடகங்கள் பிரிவு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அல்லது உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவர்கள் தொலைபேசிகளுக்கு பதிலளிக்காததால் அது தோல்வியடைந்தது.

Exit mobile version